அய்யோ என்னை விட்டுடுங்கடா… கதறிய பெண்… கழுத்தை நெரித்து சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

பெங்களூரு அருகே உள்ள தொட்டபிடரகல்லு பகுதியில் அதிகாலை வேளையில் அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காலை 5 மணியளவில் ஜெயம்மா என்ற பெண் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட சங்கிலி பறிக்கும் கொள்ளையர்கள், அவரை அமைதியாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

ஆள்நடமாட்டமற்ற ஒரு தனிமையான பகுதியில், ஜெயம்மாவை பின்னால் இருந்து கொடூரமாகத் தாக்கிய கொள்ளையன், அவரை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளான். சங்கிலியைப் பறித்த கையோடு, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் அதிவேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.

   

https://twitter.com/RTVnewsnetwork/status/2087929671656911089/video/1

   

இந்தக் கொடூரமான தாக்குதல் மற்றும் சங்கிலி பறிப்புச் சம்பவத்தின் அனைத்துக் காட்சிகளும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.