“ப்ளீஸ் அப்பா, எங்களை விட்ரு வேண்டாம்”… பெற்ற 2 மகள்களை வீட்டுக்குள்ளேயே வைத்து கதற கதற தந்தை செய்த கொடூரம்…… நாட்டையே உலுக்கும் பயங்கரம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் (45) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இதனிடையே மஞ்சுநாத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதைக்கு அடிமையான மஞ்சுநாத் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தன்னுடைய இரண்டு மகள்களையும் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விடாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர். அப்போது தங்கள் தந்தையே தங்களை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் இது குறித்து வெளியே கூறி விடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருப்பதாகவும் கூறி கதறி அழுதனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குழந்தைகளின் தாயிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்,நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டிலிருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கேட்டு கிராம மக்கள் அனைவரும் கொந்தளித்த நிலையில் அனைவரும் ஒன்றாக திரண்டு போலீஸ் நிலையத்திற்கு முன்பு பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பாலியல் பலாத்காரம் செய்த அவனைத் தூக்கில் போட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

1 மணத்தியாலம் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

1 மணத்தியாலம் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

1 மணத்தியாலம் ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

1 மணத்தியாலம் ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

1 மணத்தியாலம் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

1 மணத்தியாலம் ago