கள்ளக்காதலுக்கு இடையூறு.. 9 வயது மகளைக் கழுத்தை இறுக்கிக் கொன்ற தந்தை… நடுரோட்டில் நடந்த சம்பவம்….!

Spread the love

ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் மனித நேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மார்க்காபுரம் மாவட்டம் திரிபுராந்தகம் கிராமத்தைச் சேர்ந்த சிவா ரெட்டி என்பவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஜூபீ என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான இந்தத் தொடர்பை ஒன்பது வயதேயான மகள் துளசி வந்தனா கண்டுபிடித்துள்ளார். தனது ரகசியம் மகளுக்குத் தெரிந்துவிட்டதால், அவர் அதைத் தனது மனைவியிடம் கூறிவிடுவார் என்று அஞ்சிய சிவா ரெட்டி, மகளையே தீர்த்துக்கட்டத் துணிந்துள்ளார்.

தன் கள்ளக்காதலைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலி பாஜூபீயுடன் இணைந்து சிவா ரெட்டி ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, ஒருநாள் இரவு தனது தாத்தாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த சிறுமி துளசி வந்தனாவை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று பாஜூபீயின் வீட்டில் வைத்துள்ளார். அங்கு வைத்து சிறுமியின் வாயில் துணியைத் திணித்துச் சத்தம் போடவிடாமல் தடுத்து, மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

மகளைக் கொலை செய்த பிறகு, பாஜூபீ வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேற, சிவா ரெட்டி ஏதுமே அறியாதவர் போலத் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மறுநாள் காலை குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீவிரமாகத் தேடியுள்ளனர். அப்போது நீண்ட நேரமாகப் பாஜூபீயின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக்கண்டு சந்தேகமடைந்த மக்கள், பூட்டை உடைத்துப் பார்த்தபோது அங்கு துளசி வந்தனா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சிவா ரெட்டி மற்றும் அவரது கள்ளக்காதலி பாஜூபீ ஆகியோரைக் கைது செய்தனர். குற்றவாளிகளைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, ஆத்திரமடைந்த கிராமப் பெண்களும் பொதுமக்களும் சிவா ரெட்டியைச் செருப்பால் அடித்து இழுத்துச் சென்றனர். பெற்ற மகளையே கள்ளக்காதலுக்காகக் கொலை செய்த தந்தையின் இந்த அரக்கத்தனம் அந்தப் பகுதி முழுவதிலும் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திடீர் யு-டர்ன்..! ரூ. 20,000 கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுகிறது தமிழக அரசு..? அதிரடி பின்னணி..!!

தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…

23 minutes ago

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

24 minutes ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

34 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

42 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

43 minutes ago