மும்பையில் தர்பூசணி சாப்பிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அதிர்ச்சி வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பரிசோதனை செய்ததில், அவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பேரிழப்பிற்கு தர்பூசணி காரணமல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சக்திவாய்ந்த ‘மார்ஃபின்’, ஆரோக்கியமாக இருந்த அந்தக் குடும்பத்தினரின் உடலுக்குள் எப்படிச் சென்றது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்பூசணியால் நேர்ந்த மரணம் என்று நினைத்த நிலையில், மருந்துப் பொருள் கலப்பால் மரணம் நிகழ்ந்திருப்பது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…