பகீர்… மொஹரம் ஊர்வலத்தில் 30,000 பேரை குறிவைத்த ‘மரண மாத்திரைகள்’… விநியோகித்து மக்களை கொல்ல சதி… முறியடித்த மும்பை போலீஸ்…!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில், விஷம் கலந்த மாத்திரைகளைக் கொடுத்து மக்களைக் கொல்ல முயன்ற நபரின் சதியை போலீசார் முறியடித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 30,000 விஷ மாத்திரைகளைத் தயாரிக்க அவர் இலக்கு வைத்துச் செயல்பட்டுள்ளார். ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு முன்பாகவே அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்த நபர், இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். மாத்திரைகளுக்கான வெற்று கேப்சியூல்களுக்குள் , ‘ஜின்க் பாஸ்பைடு’ எனப்படும் எலி விஷப் பவுடரை நிரப்பி அவர் இந்த விஷ மாத்திரைகளைத் தயாரித்துள்ளார். வழக்கமாக மொஹரம் ஊர்வலங்களின் போது, பங்கேற்பாளர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காகவோ அல்லது நேர்த்திக்கடனாகவோ உணவு, தண்ணீர் அல்லது மருந்துகள் வழங்கப்படும் வழக்கத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்றுள்ளார்.

இந்த விஷ மாத்திரைகள் ஊர்வலத்தில் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற நபர் ஒருவருக்குத் திடீரென கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விடுதியில் மறைந்திருந்த அந்த நபரைக் கைது செய்து சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

7 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

8 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

8 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

8 மணத்தியாலங்கள் ago