திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள பசுமணிநகரைச் சேர்ந்த அசோக்குமார் (37), தனது குடும்பத்தினர் நால்வருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குப் பக்தி பயணம் மேற்கொண்டார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் காரில் திருச்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் அருகே உள்ள லாரிகள் எடை கண்காணிப்பு மையம் அருகில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்பக்க டயர் வெடித்துச் சிதறியது.
டயர் வெடித்த வேகத்தில் காரின் கட்டுப்பாடு இழந்தது. இதனால் அந்த கார் சாலையின் நடுவே இருந்த தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் அடியோடு சாய்ந்து காரின் மேலேயே விழுந்தது. இந்த விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், காரில் பயணம் செய்த அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மின்கம்பம் சாய்ந்ததன் காரணமாக அந்தப் பகுதியில் உடனடியாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின்இணைப்பைத் துண்டித்து, சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் தரிசனம் முடித்துத் திரும்பிய பக்தர்கள் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பியது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…