நாடே அதிர்ச்சி..! ஓடும் ஆம்புலன்ஸிலில் தொங்கிய சடலம்… இறந்தவரின் குடும்பத்தினரே சாலையில் எறிந்துவிட்டு சென்ற கொடூரம்..!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து இறந்த நபரின் உடலை சாலையில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. உயிரிழந்தவர் ஹிருதய் லால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில் குடும்ப உறுப்பினர்கள்  போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக சாலையில் உடலை வீசிதாக கூறப்படுகிறது. வீடியோவில் ஆம்புலன்ஸ் பின்புறத்தில் தொங்கி கொண்டிருந்த நபர் ஒருவர் உடலை சாலையில் பாதியிலேயே இழுத்து செல்வதை பார்க்க முடிகிறது. பிறகு கீழே தள்ளி விடுகிறார். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அவரை தடுக்க முயற்சிக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்து உடலை நோக்கி ஓடுவதையும் பார்க முடிகிறது.

ஆகஸ்ட் 1ம் தேதி அன்று மது போதையில் இருந்த ஒருவருக்கும், இறந்தவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வன்முறையாக மாறி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஹிருதய் லால் சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து உயிரிழந்தவரோடு சண்டையிட்ட குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்தவரின் குடும்பத்தினர் சிலர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆம்புலன்ஸில் இருந்து உடலை சாலையில் வீசியதாக கூறப்படுகிறது. தற்போது இறந்த உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago