Connect with us

Tamizhanmedia.net

“பேசாம பொண்ணுங்ககிட்ட தப்பா தான் நடந்துக்கிட்டன்னு ஒத்துக்கிட்டு இருக்கலாம் போல”.. BB போட்டியாளர்களால் கடுப்பான பிரதீப் வெளியிட்ட பதிவு…

CINEMA

“பேசாம பொண்ணுங்ககிட்ட தப்பா தான் நடந்துக்கிட்டன்னு ஒத்துக்கிட்டு இருக்கலாம் போல”.. BB போட்டியாளர்களால் கடுப்பான பிரதீப் வெளியிட்ட பதிவு…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 61 நாட்களையும் நிறைவு செய்துள்ளது.  இந்நிகழ்ச்சியை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் .இவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

   

இருப்பினும் தற்பொழுது இவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட வேலையை நோக்கி நகர்ந்து விட்டார். டைட்டில் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவருக்கு என இணையதள பக்கத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர்.

இது குறித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷு முதலில் பதிவு வெளியிட்டு பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் பிரதிப் பற்றியும், அங்கு என்ன நடந்தது? என்பதை பற்றியும், மேலும் இந்த ரெட் கார்ட் விவகாரம் தொடர்பாகவும் பேட்டி அளித்து வருகின்றனர். குறிப்பாக அக்ஷயா மற்றும் பிராவோ இருவரும் இறுதியாக பேட்டியளித்திருந்தனர்.

இதனால் கடுப்பான பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வாரவாரம் வெளியே வர contestants-அ  இப்படித்தான் மன்னிச்சுட்டு இருக்கேன். பேசாம பொம்பள பொறுக்கின்னு ஒத்துக்கிட்டு கூட நிம்மதியா இருக்கலாம் போல. எழுத விடுங்க ப்ளீஸ். நான் மனசுல வச்சுக்கல மன்னிச்சிட்டேன். என் பிரச்சனை என்னது. உங்க பிரச்சனை உங்களது. இதுக்கில்லையா சார் ஒரு எண்டு’ என்று கூறி வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

More in CINEMA

To Top