Connect with us

CINEMA

சத்தமில்லாமல் இரண்டாவது திருமணத்தை முடித்த சீரியல் நடிகை தீபா.. அவரே வெளியிட்ட (வீடியோ)..

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவு பெற்ற தொடர்தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த தொடர் இரு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதில் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை தீபா. அவர் பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

   

இதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். முதல் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்ற நடிகை தீபா, தற்போது சாய் கணேஷ் பாபு என்பவரை சில எதிர்ப்புகளால் ரகசியமாக பதிவு திருமணம் செய்துள்ளார் என கூறப்பட்டு வந்தது. சாய் கணேஷ் நிறைய தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தில் பாபு என்று அழைப்பார்கள். பாபு வீட்டில் தீபாவை மறுமணம் செய்ய நிறைய எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக மறுமணம் செய்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் சீரியல் நடிகை தீபா.  இவர் தற்பொழுது முதன்முறையாக தான் பாபுவை இரண்டாவது திருமணம் செய்ததை உறுதிப்படுத்தும் விதமாக திருமண வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Deepa babu (@deepababu90)

author avatar
Continue Reading

More in CINEMA

To Top