CINEMA
43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் அனுஷ்கா..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் ஸ்வீட்டி ரெட்டி. 2005 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த அனுஷ்கா சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இரண்டு திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு வேட்டைக்காரன், சிங்கம், என்னை அறிந்தால், லிங்கா உள்ளிட்ட அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
நடிகை அனுஷ்காவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது அருந்ததி மற்றும் பாகுபலி தான். அதிலும் தேவசேனா கதாபாத்திரம் இன்றளவும் இவரை பாப்புலராக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அதை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் உடல் எடையை அதிகரித்து பின்னர் குறைக்க முடியாமல் போனதால் அவரின் மார்க்கெட் தொடர்ச்சியாக சரிவை சந்தித்தது. தற்போது தெலுங்கிலும் மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி காதல் கிசு கிசுவில் சிக்கிக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு 43 வயது ஆகின்றது. அது மட்டும் இல்லாமல் பிரபாஸை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அதனை மறுத்துவிட்டனர்.
என்னதான் மார்க்கெட் இழந்தாலும் சொத்து மதிப்பில் டாப்பில் இருக்கின்றார் அனுஷ்கா. அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 130 கோடியாகும். ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர் விளம்பர படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குகின்றார். சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேல்களிலும் பல கோடிகள் அவர் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.