CINEMA
‘நீங்க பிளான் பண்ணி ஒண்ணா சேர்ந்து அவரை அசிங்க படுத்திட்டீங்க’… மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜாவை வெளுத்து வாங்கிய சசிகுமார்…
பலஆண்டுகளாக தொடர்ந்து வரும் அமீர் – ஞானவேல் ராஜா, ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை விவகாரம் தற்பொழுது சோ சியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் பொண்வண்ணன், நடிகர் சினேகன் என இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ‘பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா; என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவர் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்தி சில வார்த்தைகள் அவர்களை புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி’ என்று குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு இருந்தார்.
இப்பதிவினை பார்த்த நடிகர் சசிகுமார், ‘போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ‘நான் பயன்படுத்தி சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படி எனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீருக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். இதோ அவரின் பதிவு…
#Ameer #Paruthiveeran #Gnanavelraja pic.twitter.com/VuzqC8Cuvq
— M.Sasikumar (@SasikumarDir) November 29, 2023