ஆகஸ்ட் 4, செவ்வாய்க்கிழமை அன்று சிங்கரேணி காலனியில் அமீர் என்ற 35 வயது ஆட்டோ ஓட்டுநர் நிதித் தகராறு காரணமாகப் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். பலத்த காயமடைந்த அமீர் உடனடியாக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இக்கொலையைச் செய்தவர் அமீரின் அண்டை வீட்டில் வசிக்கும் சுமேன் என்ற மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளி தற்போது தலைமறைவாக உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோவில், அமீர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடக்க, சுமேன் அவரை அரிவாளால் மீண்டும் மீண்டும் தாக்குவது பதிவாகியுள்ளது. சுற்றிலும் கூடிநின்ற பொதுமக்கள் அலறித் துடித்த போதிலும், ஒருவர் கூடத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. இச்சம்பவம் குறித்துச் சைதாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/HateDetectors/status/2084880717386002498/video/1
செய்தியாளர்களிடம் பேசிய யாகுத்புரா சட்டமன்ற உறுப்பினர் ஜாஃபர் உசேன் மேராஜ், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார். “இந்தச் சம்பவம் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது… அமீருக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர், இப்போது அவர்களை யார் காப்பாற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த…
தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று…
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்…
தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி…