2011ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் (SC) முடிவெடுத்துள்ளது. அந்தத் தேர்தலில் பரவலாகப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் ஸ்டாலினின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்து, இறுதித் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வு இதிலிருந்து விலகியதால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வின் முன்னிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வழக்கு மீண்டும் முதன் முதலிலிருந்து விசாரணைக்கு வரவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…