2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, அதிமுகவில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் முக்கியத் தூண்களாகவும் மூத்த தலைவர்களாகவும் கருதப்பட்ட செம்மலை, தனபால் உள்ளிட்ட மூன்று முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியிருப்பது அதிமுகவிற்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கட்சியின் மற்றொரு முக்கிய முகங்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தலைமையில் கணிசமான தொண்டர்களும் நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாகக் களம் இறங்கியிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பேரிடியாகவும் மிகுந்த வேதனை அளிக்கும் விஷயமாகவும் உருவெடுத்துள்ளது. உட்கட்சிப் பூசல்களும் அடுத்தடுத்த ராஜினமாக்களும் அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இந்த இக்கட்டான அரசியல் சூழலை இபிஎஸ் எவ்வாறு கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…
"இன்னொரு ஆண் பிள்ளை வேண்டும்" என்ற ஆசையினால், 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தனது 8 வருட…
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள்…
கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…