கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘சுதர்சன்’ என அடையாளம் காணப்பட்ட சென்னையைச் சேர்ந்த அந்த இளைஞர், தான் கனடாவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பியதற்கான உணர்வுப்பூர்வமான காரணங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் சுயமாகவே இந்தியாவுக்குத் திரும்பிவிட்டேன். நம்மிடம் இருக்கும் பணத்தைச் செலவழிப்பதற்கு நம்முடன் யாரும் இல்லை என்றால், அந்தப் பணத்தால் என்ன பயன்? கனடா ஒரு மன அழுத்தத்தைத் தரும் நாடு. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் இப்போதுதான் உண்மையாகப் புன்னகைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அடுத்து யார் வரப்போகிறீர்கள்?” என்ற கேள்வியுடன் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DYkp7aFT6-p/?utm_source=ig_web_copy_link
இவ்வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது முடிவை ஆதரித்து, அந்நிய நாட்டில் அனுபவிக்கும் தனிமை, கடுமையான குளிர் மற்றும் குடும்பப் பிரிவு போன்ற மனரீதியான போராட்டங்களை விட மன அமைதியே முக்கியம் என்று கூறியுள்ளனர். அதேவேளையில், மற்றொரு தரப்பினர் வெளிநாட்டில் குடியேறும்போது ஆரம்பக் காலத்தில் இத்தகைய சவால்கள் இயல்பானவை என்றும், பொறுமையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே அங்கு சாதிக்க முடியும் என்றும் தங்களது மாற்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…