BREAKING: மீண்டும் வழக்கு… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…. காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 22, 2026

Spread the love

2011ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் (SC) முடிவெடுத்துள்ளது. அந்தத் தேர்தலில் பரவலாகப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் ஸ்டாலினின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்து, இறுதித் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வு இதிலிருந்து விலகியதால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வின் முன்னிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வழக்கு மீண்டும் முதன் முதலிலிருந்து விசாரணைக்கு வரவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.