#image_title
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக அசத்தி வரும் சூரி அடுத்ததாக மற்றொரு சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருக்கின்றார். முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கும் இவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். அப்படி தனக்குள் இருக்கும் நடிகரை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார் சூரி. விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு சூரி தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
அந்த வகையில் விடுதலை இரண்டு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே கருடன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி செந்தில்குமார் இயக்கிய இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இது தவிர மேலும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர் கொட்டுக்காளி, இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி என்ற இரண்டு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சூரி அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கின்றார். விமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டு கொடுத்த விலங்கு என்கின்ற வெப் சீரியஸை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் இயக்கத்தில் தான் சூரியின் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் டிடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…