#image_title
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக அசத்தி வரும் சூரி அடுத்ததாக மற்றொரு சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருக்கின்றார். முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கும் இவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். அப்படி தனக்குள் இருக்கும் நடிகரை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார் சூரி. விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு சூரி தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
அந்த வகையில் விடுதலை இரண்டு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே கருடன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி செந்தில்குமார் இயக்கிய இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இது தவிர மேலும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர் கொட்டுக்காளி, இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி என்ற இரண்டு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சூரி அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கின்றார். விமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டு கொடுத்த விலங்கு என்கின்ற வெப் சீரியஸை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் இயக்கத்தில் தான் சூரியின் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் டிடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…