#image_title
ராஜமவுலி இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. சவுத் இந்தியன் குயின் என அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். தொடக்கத்தில் அஜித், விஜய், சூர்யா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த அதைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது.
#image_title
குந்தவையாக நடித்து அனைவரது மனதிலும் மீண்டும் இடம் பிடித்தார் திரிஷா . தற்போது தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வரும் திரிஷா பழையபடி முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றார், நடிகர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் மிகப்பெரிய புகழே பெற்றுவிட்டார்,
அதை தொடர்ந்து இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்து பிரபலமானது, இதனால் இவருடைய இயக்கத்தின் நடிப்பதற்கு பல நடிகர் நடிகைகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இப்படி மிகப்பெரிய பெருமையை உடைய ராஜமவுலி இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்க மறுத்துள்ளார். அதாவது இயக்குனர் ராஜமவுலி மரியாதை ராமண்ணா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அப்படத்தில் காமெடி நடிகர் சுனில் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு தான் திரிஷாவை அணுகினார்களாம். ஆனால் திரிஷா காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்தால் என்னுடைய மார்க்கெட் குறைந்து விடும். தன்னால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என்று கூறி பட வாய்ப்பு மறுத்தவராக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் தான் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கும் புல்லு ஆயுதம் என்ற திரைப்படம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…