கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணக் கதையைச் சிறுவர்கள் மாற்றி எழுதியது குறித்துப் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்தப் பேச்சில், ராமர் தென்னிந்தியாவிற்கு வரும்போது ராவணனின் நிலத்தில் பழங்களைச் சாப்பிடுவதாகவும், அதற்கு ராவணன் தரப்பு 2000 டாலர் மற்றும் ஜிஎஸ்டி கேட்பது போலவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமித் சச்தேவா உள்ளிட்ட பலர் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்தக் கதையைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், வடக்கிலிருந்து வருபவர்கள் தென்னிந்திய மக்கள் மீது இந்தி மொழியையோ அல்லது உணவுப் பழக்கங்களையோ திணிக்கக் கூடாது என ஆவேசமாகத் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே மதம்” என்ற கொள்கையைச் சாடிய அவர், தென்னிந்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பல மாதங்களுக்கு முன்பு பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருவதுடன் சட்ட ரீதியான சிக்கல்களும் அதிகரித்துள்ளன.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…