கர்நாடகா மாநிலம், தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள ‘காவேரி’ என்ற கல்குவாரியில் நிகழ்ந்த பயங்கர பாறை சரிவு விபத்தில் பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த சமயத்தில் குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், அங்குள்ள பிரம்மாண்ட பாறைகளை அகற்றும் பணியில் ஹிட்டாச்சி இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அப்போது, இயந்திரத்தை இயக்கிய நபர் அருகில் தொழிலாளர்கள் நின்றுகொண்டிருந்ததை கவனிக்காமல் பாறையை நகர்த்தியதால், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பாறை சரிந்து விழுந்து இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…