“நான் செத்துட்டேன்.. தனக்குத்தானே RIP ஸ்டேட்டஸ் வைத்த கணவன்”… வீட்டிற்குள் ஓடிச்சென்று மனைவி செய்த காரியம்…. ஊரையே நடுங்க வைத்த சம்பவம்..!

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31). நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவருக்கு, காயத்ரி (24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனமுடைந்த பிரவீன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற அவர், எலிமருந்தை வாங்கிச் சாப்பிட்டதோடு நில்லாமல், சமூக வலைத்தளமான ‘ஹெலோ’ செயலி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்து ‘RIP’ என்று பதிவிட்டுள்ளார்.

கணவனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்த மனைவி காயத்ரி, அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோனார். தனது கணவர் நிஜமாகவே இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்ட அவர், பதற்றத்தில் செய்வதறியாது திகைத்துள்ளார். கணவனை இழந்த துயரத்தைத் தாங்க முடியாமல், மனமுடைந்த காயத்ரி உடனடியாக வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு அவசரமான பதிவும், அதனால் ஏற்பட்ட தவறான புரிதலும் ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சோகம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

மறுபுறம், எலிமருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் மைலி அம்மன் கோவில் அருகே கிடந்த பிரவீனை, அங்கிருந்த பொது மக்கள் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் விளையாட்டாகவோ அல்லது விரக்தியிலோ போட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், மனைவியின் உயிரைப் பறித்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

6 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

6 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

6 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

6 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

7 மணத்தியாலங்கள் ago