“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

Spread the love

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. சவாரி முடிந்து பயணி ஒருவர் ஆட்டோ கட்டணத்துடன் தவறுதலாக 50 ரூபாய் கூடுதலாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பணத்தை எண்ணிப் பார்த்தபோது தனக்கு உழைக்காமல் கிடைத்த கூடுதல் பணம் இது என்பதை உணர்ந்த ராஜு பாபா, அதைத் தன் சொந்தத் தேவைக்கு வைக்காமல், தேவையுள்ள மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடிவெடுத்தார்.

அவர் தனது ஆட்டோவில் செல்லும்போது, சாலையில் நடந்து சென்ற ஒரு முதிய பெண்ணைப் பார்த்து வண்டியை நிறுத்தி, அவரிடம் கட்டணம் ஏதும் வாங்காமல் இலவசமாக அவரது இலக்கில் கொண்டு போய் சேர்த்துள்ளார். அதோடு நில்லாமல், தன்னிடம் இருந்த பணத்தில் இருந்து 10 ரூபாயையும் அவரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பெண் முதலில் தயங்கியபோதும், தனக்குக் கிடைத்த கூடுதல் பணத்தின் ஒரு பகுதி இது என்று கூறி மகிழ்ச்சியோடு கொடுக்க, அவரும் ஆசிர்வதித்து வாங்கிக் கொண்டார். தொடர்ந்து, கடும் வெயிலில் நடந்து சென்ற மற்றொரு முதியவருக்குத் குடிநீர் பாட்டிலும், 10 ரூபாயும் கொடுத்து உதவி செய்துள்ளார்.

https://www.instagram.com/reel/DZz6o27oAlT/?utm_source=ig_web_button_share_sheet

தன்னிடம் இருந்த 50 ரூபாயில் 20 ரூபாயை இவ்வாறு செலவிட்ட அவர், மீதமுள்ள 30 ரூபாயையும் அடுத்தடுத்து தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்கப் போவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த மனிதநேயப் பண்பு சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. “உண்மையான செல்வம் என்பது வங்கிச் சேமிப்பில் இல்லை, மனிதர்களின் நல்மனதில் தான் இருக்கிறது” என்று நெட்டிசன்கள் பலரும் இவரைப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

14 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

19 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

22 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

27 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

34 minutes ago