மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளின் எரிபொருளைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு தற்போது நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகம், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் மின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்கவும், எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, இரண்டேகால் மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை மின்கட்டணம் உயர்வது தவிர்க்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் திட்டமிட்ட மின்வெட்டிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய வணிக நகரங்களான கராச்சி மற்றும் ஐதராபாத் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோடை காலத்தின் தொடக்கத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம், பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…