தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இறுதியாக விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 100 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரான இவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.
அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த சூழலில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரெட் டிராகனாக அஜித்தை ஃபேன்ஸ்களுக்காக ட்ரீட் ஆகவே படத்தை இயக்கிக் கொடுத்தாலும் இந்த படம் 300 கோடி வசூலை தொடவில்லை. விஜயின் மெகா சீரியல் படமான வாரிசு திரைப்படமே 300 கோடியை தொட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
லியோ மற்றும் கோட் படங்கள் எல்லாம் பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அஜித்துக்கு மட்டுமே சம்பளம் ஆக 165 கோடி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மட்டுமே 146 கோடி மட்டும் தான் படம் வசூல் செய்துள்ளது. அதே சமயம் உலக அளவில் இந்த திரைப்படத்தின் வசூல் 212 கோடி என்று தான் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்த நிலையில் அதிகபட்சமாக 66 கோடி வரை நஷ்டம் என கூறியுள்ளது.
அஜித் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இதுதான் என்று கூறப்பட்டாலும் இந்த படம் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படத்தின் வசூலை கூட தொடவில்லை என்பதுதான் சோகமான விஷயம். படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களில் ஒட்டுமொத்தமாக 212 கோடி வசூல் மட்டுமே வந்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உலக அளவிலான வசூல் அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…