தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜனநாயக்கன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் என்னவென்றால் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இந்தப் படம் தான் அவருடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்தப் படத்தை முடித்த கையோடு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் இடையில் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கின்றார். விக்கிரவாண்டியில் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் கூட்டிய நிலையில் அடுத்தடுத்து பல கூட்டங்களையும் நடத்தி வருகின்றார். விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ள நிலையில் மற்ற அரசியல் தலைவர்களையும் விஜய் விமர்சித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் நடிகர் விஜய் குறித்து பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே கர்நாடகா அரசியலில் தனக்கான முத்திரையை பதித்து வரும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தைரியமாக பேசியும் வருகின்றார். அதில் விஜய் மற்றும் பவன் கல்யாண் இருவருமே நடிகர்கள் என்பதால் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். இதைத் தாண்டி இவர்களிடம் தெளிவான அரசியல் பார்வை எதுவும் இல்லை.
மேலும் ஒரு பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் இவர்களிடம் தெளிவாக இல்லை என்று தெரிகிறது. தனக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து அரசியல் களம் காண்கின்றனர். அரசியலைப் பற்றி முழுமையான தெளிவு எதுவும். இந்த இருபது வருடங்களில் இவர்கள் இருவருடனும் நான் அரசியல் பற்றி ஒரு தீவிரமான விவாதம் கூட செய்ததில்லை. ரசிகர்களை வைத்துக்கொண்டு அரசியல் பற்றி தெளிவான சிந்தனை எதுவும் இல்லாமல் அரசியலில் இருவரும் இணைந்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் அதில் பேசியுள்ளார். விஜய் பற்றி பிரகாஷ்ராஜ் இப்படி தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…