#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியை காதலித்து கரம் பிடித்து இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றது. இந்த ஜோடிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றன. அஜித் ஷாலினி போல் நம் காதலும் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவது உண்டு.
நடிகர் அஜித் சரண் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது ஷாலினியை காதலித்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தான் ஷாலினி நடித்தார். இருவரும் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 24, 2000 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து அஜித்-ஷாலினி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தை வரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் ஷாலினி தனது இரண்டு குழந்தைகளை கவனமாக வளர்த்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். எவ்வளவுதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடக் கூடியவர். இன்று தங்களது 24-வது திருமண நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…