#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியை காதலித்து கரம் பிடித்து இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றது. இந்த ஜோடிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றன. அஜித் ஷாலினி போல் நம் காதலும் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவது உண்டு.
நடிகர் அஜித் சரண் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது ஷாலினியை காதலித்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தான் ஷாலினி நடித்தார். இருவரும் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 24, 2000 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து அஜித்-ஷாலினி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தை வரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் ஷாலினி தனது இரண்டு குழந்தைகளை கவனமாக வளர்த்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். எவ்வளவுதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடக் கூடியவர். இன்று தங்களது 24-வது திருமண நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…