கடலூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் டூ மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் முகத்தில் கிழித்து விட்டு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அருள்குமார் பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து மாணவியின் பின்னால் அலைந்து திரிந்து மாணவி அவரை காதலிக்க ஒப்புக்கொள்ளவே இல்லை.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அருள்குமார் நேற்று பேருந்து நிலையத்தில் மாணவி பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்தபோது மாணவியை அருள்குமார் முகத்தில் பேனா கத்தியால் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் கூச்சலிட பொதுமக்கள் அந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற அருள்குமாரை தேடி வருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…