கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. சென்னை புறநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நள்ளிரவு மின்தடைப் பிரச்சினை பெரும் அவதியை ஏற்படுத்தி வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, அரசு விருந்தினர் மாளிகையிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு மின்தடை ஏற்பட்டுள்ள விவகாரம் இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று நடைபெற்ற பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். இதன் ஒருபகுதியாக குருங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியையும் அவர் நேரில் சென்று தொடங்கி வைத்தார். தனது அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, நேற்றிரவு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக லால்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்றுள்ளார்.
அவர் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே, அங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடுமையான உக்கிருகத்தில் ஓய்வெடுக்க முடியாமல் தவித்த சௌமியா அன்புமணி, வேறு வழியின்றி நீண்ட நேரம் தனது காரிலேயே அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அதன் பின்னரும் மின்சாரம் வராததால், காரை விட்டு இறங்கி டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியோடு தனது அறைக்குச் சென்று, அங்கிருந்து உடனடியாகத் தனது பயணத்தைத் தொடரப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தச் சம்பவம் பாமகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு விருந்தினர் மாளிகையில் ஜெனரேட்டர் வசதி இருந்தும், மின்தடையின் போது அது ஏன் இயக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து விளக்கம் கேட்க மின்சாரத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இது தற்செயலான மின்தடை அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட மின் துண்டிப்பு என்று குற்றம் சாட்டியுள்ள பாமகவினர், இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையான புகாரை அளித்துள்ளனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…