கல்லூரிக்கு சென்ற மாணவன்…! செல்போனில் பேசி விட்டு வீட்டிற்கு வந்த நண்பன்…. ரயில்வே ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் பார்சல் ஊராட்சி பசுமைநகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர் ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்டனர். மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வாசலில் நிறுத்தி இருந்த கார் வீட்டிற்குள் இருந்த மடிக்கணினி ஆகியவை காணாமல் போனது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ராகுலின் நண்பனான நிரஞ்சன்(19) என்பவர் காரை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து நிரஞ்சனை கைது செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் நிரஞ்சன் கூறியதாவது, சம்பவம் நடந்த அன்று நிரஞ்சன் ராகுலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்? எனக் கேட்டுள்ளார். உடனே ராகுல் நான் கல்லூரிக்கு வந்து விட்டேன். அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்று விட்டார்கள் என கூறியுள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த நிரஞ்சன் சாவி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று காரின் சாவி மற்றும் மேஜை மீது இருந்த மடிக்கணியை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த கார், மடிக்கணினியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Devi Ramu

Recent Posts

அய்யய்யோ… என்ன கொடுமை இது…. மகளின் சாதி மறுப்புத் திருமணம்…. உயிருடன் இருக்கும் போது… பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை… அதிர்ச்சியில் கிராமம்…!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

7 minutes ago

அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…

16 minutes ago

ஐயோ பாவம்… விநாயகர் சதுர்த்தியில் நேர்ந்த கோர விபத்து… கிணற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் துடிதுடித்து பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…

25 minutes ago

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

9 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

9 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

9 மணத்தியாலங்கள் ago