“கடைசி போன் கால்…” மகளை பள்ளியில் விட்டு வந்த தமிழ்ச்செல்வி… யார் அந்த பர்னிச்சர் கடைக்காரர்…? பெண் கொலையில் வெளியான பகீர் தகவல்கள்…!!

Spread the love

புதுச்சேரி, வில்லியனூர் வி.மணவெளியைச் சேர்ந்த 41 வயது நிரம்பிய தமிழ்ச்செல்வி என்பவர், கணவரை விவாகரத்து செய்தபின் மகளுடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மகளைப் பள்ளியில் விட்டுச் சென்றவர், மாலை பள்ளிக்கு மகளை அழைக்க வரவில்லை. இதனால் அவரது தம்பி மதன்ராஜ், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் தமிழ்ச்செல்வியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, ஒதியம்பேட்டையைச் சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் ஐயப்பன் (45) என்பவருடன் அவர் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்தான் தமிழ்ச்செல்வியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

ஐயப்பனும் தமிழ்ச்செல்வியும் கள்ளக்காதல் உறவில் இருந்ததாகவும், சமீபத்தில் தமிழ்ச்செல்வி ஐயப்பனிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று தமிழ்ச்செல்வி, ஐயப்பனின் வீட்டிற்குச் சென்றபோது, ஐயப்பன் பணத்தைத் திரும்பக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஐயப்பன், தமிழ்ச்செல்வியைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, சடலத்தை பாலித்தீன் சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டி, வில்லியனூர் கோர்க்காடு வாய்க்காலில் வீசியுள்ளார். ஐயப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். . ஐயப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

1 minute ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

10 minutes ago

“CM விஜய் சொன்ன ‘தூய சக்தி’ அரசியல் இதுதானா…?” – சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை..?! கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…

16 minutes ago

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

10 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

10 மணத்தியாலங்கள் ago