அர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி , முன்னாள் பார்சிலோனா அணியின் வீரர் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் அர்ஜென்டினா சர்வதேச வீரர் ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் காலை 11.30 மணியளவில் சால்ட் லேக் மைதானத்தை அடைந்தார். விருந்தினர்களில் மெஸ்ஸி முதலில் மைதானத்திற்குள் நுழைந்தார் சிறிது நேரம் நடந்து சென்று கூட்டத்தினரை கையசைத்து வரவேற்றார்.
இருப்பினும் ரசிகர்கள் விரைவில் ஏமாற்றமடைந்தனர். ஏனெனில் விஐபி விருந்தினர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் நெருக்கமாக சூழப்பட்டார். இது அரங்கின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பார்வையைத் தடுத்தது. பல பார்வையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்த போதிலும், நேரிலோ அல்லது அரங்கத்தின் பெரிய காட்சித் திரைகள் வழியாகவோ அவரை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று புகார் கூறினர்.
கொல்கத்தா வந்த மெஸ்ஸியை காண ரசிகர்கள் ஸ்டேடியத்தில் காத்திருந்த நிலையில் சிலையை திறந்து வைத்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 12 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் வாங்கியும் அவரை பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் இருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…