சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரிக்கு முன், கார் ஓட்டுநர் நந்தகுமார் மற்றும் பைனான்ஸ் கலெக்சன் ஏஜென்ட் மாணிக்கம் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் லேசாக மோதியதில் சண்டை ஏற்பட்டது. முதலில் வாய்த்தகராறாக ஆரம்பித்த சண்டை, பின்னர் கைகலப்பாக மாறியது.
இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த நந்தகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேக்கரிக்குள் புகுந்த மாணிக்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணிக்கம், நந்தகுமாரிடமிருந்த அரிவாளைப் பறித்து பதிலுக்கு அவரையும் கடுமையாக வெட்டியிருக்கிறார்.
சினிமா பாணியில் நடந்த இந்தக் கொடூரச் சண்டையைக் கண்ட அங்கிருந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணிக்கம் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வாகனம் லேசாக உரசிய சிறிய சண்டைக்காக இருவரும் மாறி மாறி அரிவாளால் வெட்டிக்கொண்ட இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…