வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த அக்லிமா அக்தர்(32) என்ற இளம் பெண் நுரையீரல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று தனியார் விமான மூலமாக அவர் சென்னைக்கு பயணித்த நிலையில் தாத்தாவிலிருந்து சென்னை நோக்கி விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் அந்த பெண்ணுக்கு திடீரென்று கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த விமான பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதால் மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் சென்று அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தனர். ஆனால் விமான இருக்கையில் சாய்ந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மாரடைப்புதான் அவருடைய மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே விமான நிலையம் விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…