ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக நேற்று முன்தினம் இரவு தன்னுடைய காதலருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இதனை நோட்டமிட்டனர். பிறகு காதலர்களை மடக்கி வாக்குவாதம் செய்துள்ளனர்.
திடிரென்று அவர்கள் அந்த இளம் பெண் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இளம் பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்று மூன்று வாலிபர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணும் காதலனும் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று வாலிபர்களையும் தொலைபேசி தேடி வந்தனர். பிறகு அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…