“47 வயது நபருடன் தொடர்ந்து 6 முறை உடலுறவு”… 6 கணவர்கள், 10 சவரன் அபேஸ்… தொழிலதிபரை ‘பெட்’ வேட்டையாடிய 22 வயது கில்லாடி பெண்….!

Spread the love

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை ‘ஹனி டிராப்’ முறையில் ஏமாற்றி, அவரிடமிருந்து 10 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற 22 வயது இளம்பெண் மற்றும் அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் மணி என்பவர், தனது காரில் காத்திருந்தபோது குன்றத்தூரைச் சேர்ந்த தீபிகா லட்சுமி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை அனாதை என்றும், வறுமையில் வாடுவதாகவும் கூறி மணியின் பரிதாபத்தைப் பெற்ற தீபிகா, அவருடன் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார்.

இந்த நட்பின் தொடர்ச்சியாக, இருவரும் ஈசிஆர் பகுதியில் டேட்டிங் சென்றுவிட்டு, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதிக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, மது போதையில் தொழிலதிபர் மணி அயர்ந்து தூங்கியுள்ளார். அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தீபிகா, மணியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த மணி, நகையும் பெண்ணும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தீபிகாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் குன்றத்தூரில் இருப்பதை உறுதி செய்து, அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் தீபிகா குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தீபிகாவிற்கு ஏற்கனவே 5 திருமணங்கள் நடந்துள்ளதும், ஒவ்வொரு கணவரிடமிருந்தும் நகை மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு விவாகரத்து செய்ததும் தெரியவந்தது. தற்போது 6-வதாக சதீஷ் என்பவருடன் வசித்து வரும் தீபிகாவிற்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது கணவர் சதீஷுடன் இணைந்தே இந்த ‘ஹனி டிராப்’ திட்டங்களைத் தீட்டியதை அவர் ஒப்புக்கொண்டார்.

திருடப்பட்ட 10 சவரன் தங்கச் சங்கிலியை விற்று, தனது 6-வது கணவர் சதீஷிற்கு தீபிகா ‘KTM’ பைக் வாங்கிக் கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இந்தச் சட்டவிரோத செயலுக்குத் துணையாக இருந்த கணவர் சதீஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திட்டமிட்டு வசதியான ஆண்களைக் குறிவைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான இருவரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago