மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள விடுதி ஒன்றில், செவிலியர் ஒருவர் தவறான கதவைத் தட்டியதால் நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த அந்தப் பெண், உதவி கேட்கத் தனது நண்பர் தங்கியிருந்த 105-ம் எண் அறைக்குச் செல்ல முயன்றார்.
ஆனால், வழிமாறி இரண்டாவது மாடியில் இருந்த 205-ம் எண் அறையைத் தட்டியபோது, அங்கிருந்த மூன்று நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துள்ளனர். உங்கள் நண்பர் உள்ளேதான் இருக்கிறார் என்று பொய் கூறி ஏமாற்றி, அந்தப் பெண்ணை அவர்கள் சிறைபிடித்தனர்.
மது போதையில் இருந்த அந்த கும்பல், செவிலியரைத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததோடு, மூவரும் சேர்ந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் அந்த நபர்களிடமிருந்து தப்பித்து வந்த செவிலியர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று பேரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவு இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…