தெலுங்கானா மாநிலம் கோடூரைச் சேர்ந்தவர் ஸ்ராவணி. கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ராவணி சைலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்ராவணி தனது அக்காள் கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து அவருடன் சென்று விட்டார். பின்னர் மீண்டும் தனது கணவரை தேடி வந்து அடைக்கலம் கேட்டார்.
உடனே சைலம் தனது மனைவியை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் யாரிடமும் பேசியதாக தெரிகிறது. இதனை சைலம் கண்டித்ததால் கோபத்தில் ஸ்ராவணி தனது பிள்ளைகளுடன் மகபூப் நகரில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் உச்சகட்ட கோபமடைந்த சைலம் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு நைசாக பேசி அவரை பைக்கில் அழைத்துச் சென்றார்.
ஒரு காட்டுப் பகுதிக்கு அருகே சென்றபோது சீதாப்பழம் பறிக்கலாம் என கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று துப்பட்டாவால் ஸ்ராவணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் குற்றத்தை மறைக்க தனது மனைவியின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சைலத்தை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…