தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கயலூர் கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் திருநாவுக்கரசு(30) சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். அவர் வேலை பார்த்து அதே துணிக்கடையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த 26 வயதான ஒரு பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமண ஆசையை ஏற்படுத்திய அவருடன் திருநாவுக்கரசு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதால் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அந்த சமயத்தில் கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் பார்க்க வந்த திருநாவுக்கரசுவிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு சென்ற திருநாவுக்கரசு அதன் பிறகு அந்தப் பெண்ணை சந்திக்கவில்லை. செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக வந்தவாசி மகளிர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…