“கொஞ்சம் நேரம் என்கூட வா”… துணி கடையில் பணிப்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த மேலாளர்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கயலூர் கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் திருநாவுக்கரசு(30) சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். அவர் வேலை பார்த்து அதே துணிக்கடையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த 26 வயதான ஒரு பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமண ஆசையை ஏற்படுத்திய அவருடன் திருநாவுக்கரசு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதால் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

அந்த சமயத்தில் கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் பார்க்க வந்த திருநாவுக்கரசுவிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு சென்ற திருநாவுக்கரசு அதன் பிறகு அந்தப் பெண்ணை சந்திக்கவில்லை. செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக வந்தவாசி மகளிர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.