தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வணிகப்பிரிவு சார்பில் அனைத்து பொறியாளர்களுக்கும் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2 ஐ நுகர்வோரிடமிருந்து பெற வேண்டியது இல்லை என அறிவுறுத்தப்பட்டது. அதே நேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றை ஒப்புதல் கடிதத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது சமீபமாக பெறப்பட்ட சொத்துவரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…