கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள இண்டி டவுனில் வசித்து வருபவர் தான் பீரப்பா மாயப்பா பூஜாரி. இவருடைய மனைவி சுனந்தா, இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என்பவருடன் சுனந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாலடிவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதைக் குறித்து பீரப்பா மனைவியை கண்டித்துள்ளார். அதனால் கணவனை கொலை செய்ய முடிவெடுத்த சுனந்தா. கடந்த 1-ஆம் தேதி அன்று சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கிய கணவரை கொலை செய்வதற்காக கள்ளக்காதலன் சித்தப்பாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
சித்தப்பா அவனுடைய நண்பருடன் சேர்ந்து வீட்டிற்கு வந்துள்ளான். மூவரும் சேர்ந்து பீரப்பாவின் கழுத்தை நெரித்து மற்றும் மர்ம உறுப்பை மிதித்துக் கொள்ள முயற்சித்துள்ளனர். பீரப்பா , சுனந்தாவை எட்டி உதைத்து கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடி வந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகு தூங்கிக் கொண்டிருந்த பீரப்பாவின் எட்டு வயது மகன் கதவை திறந்துள்ளான். வீட்டின் உரிமையாளரை கண்டவுடன் சித்தப்பா மற்றும் நண்பர் தப்பித்து ஓடி விட்டனர். தற்போது பீரப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த சுனந்தாவை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்காதலன் சித்தப்பா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் எனக்கும் இந்த கொலை முயற்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது முழுக்க முழுக்க சுனந்தா திட்டமிட்டபடி தான் அரங்கேறியது. இந்த வழக்கில் சுமந்தாவின் அண்ணன் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களையும் போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். அந்த வீடியோவில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கள்ளக்காதலன் கூறியுள்ளார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய முயற்சித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…