ஓசூர் அருகே கருச்சிதைவு ஏற்பட்டும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த மலை கிராம பெண்ணை மருத்துவ குழுவினர் தேடிச்சென்று சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போதைய சூழலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவே பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் ஓசூர் அருகே கடமை குட்டை என்ற மலை கிராமத்தில் மல்லி என்ற 40 வயது பெண் 10வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தும் வரவில்லை. அப்பகுதியில் மருத்துவ முகாமிட்ட மருத்துவர்கள் இது குறித்து தகவல் அறிந்து சுமார் 2 மணி நேரமாக அந்த பெண்ணை சிகிச்சைக்காக அழைத்தோம் அவர் வராமல் பிடிவாதம் செய்துள்ளார். பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் அந்த மலை கிராமத்திற்கு மலையேறி சென்று அந்தப் பெண்ணிடம் பேசி அவரை ஆம்புலன்ஸில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…