திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி யமுனாதேவி (48). கடந்த 25-ஆம் தேதி இவர் தனது வீட்டில் பப்பாளிப் பழம் பறிப்பதற்காக ஏணியில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யமுனாதேவியை அவசர அவசரமாக மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினர் யமுனாதேவியைக் காப்பாற்றத் தொடர்ந்து தீவிரமாகப் போராடினர். இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் யமுனாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…
மதுரை மாவட்டம் மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் உள்ளிட்ட 6 பேரின் நினைவு நாளையொட்டி, அங்குள்ள மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள்…
அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம்…
திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு…
அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள்…