தெலுங்கானா மாநிலம் சங்கரட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஐ டி ஊராக வேலை செய்து வரும் இவருடைய மனைவி மனிஷா. இவர்களுக்கு குழந்தை உள்ளது. மனிஷாவுக்கு சிறுவயது முதலில் எறும்பை கண்டாலே பயப்படும் மிரமிகோ போபியா என்ற நோய் உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மனிஷா தன்னுடைய குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு வந்து பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருந்ததை கண்டு மிரண்டு போனார்.
எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் என்னை மன்னித்துவிடு ஸ்ரீ. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே வென்று எழுதிவைத்துவிட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…