திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் கனிமொழி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என 65-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலக்கியவாதியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர், தற்போது தென் தமிழகத்தின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுவதால், மாநில அரசியலில் அவர் நேரடியாகப் பங்கேற்பது கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. மறைந்த முரசொலி மாறனைப் போலவே, டெல்லி அரசியலை லாவகமாகக் கையாளக்கூடிய ஒரு நபர் கலைஞர் குடும்பத்திலிருந்து தேவை என்பது திமுக தலைமையின் எண்ணமாக உள்ளது. காங்கிரஸ் உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளில் கனிமொழி ஆற்றி வரும் முக்கியப் பங்கைத் தலைமை தற்போதைக்கு மாற்ற விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மற்றொரு புறம், திமுகவில் அடுத்தகட்ட வாரிசு அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனிமொழியின் மாநில அரசியல் வருகை அதிகாரப் பகிர்வில் சில சவால்களை உருவாக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் அவர் டெல்லி அரசியலிலேயே தொடர வேண்டுமா அல்லது தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பதில் திமுக தலைமை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இந்தச் சூழலில், கனிமொழியின் அரசியல் பயணம் டெல்லியை நோக்கியதா அல்லது கோட்டையை நோக்கியதா என்பது இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் மூலம் தெளிவாகிவிடும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…