தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர், நாகர்கோவில், மதுரை தெற்கு உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் பாஜக களம் காண உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்கப் போகும் 27 வேட்பாளர்களின் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வை இறுதி செய்யும் பணிகளில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வேட்பாளர் பட்டியல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பட்டியலை வெளியிடுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தான் நாளை டெல்லி செல்லும் திட்டம் ஏதுமில்லை என்றும், அவ்வாறு டெல்லிக்குச் செல்ல நேர்ந்தால் நிச்சயமாகச் செய்தியாளர்களுக்குத் தெரியப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக போன்ற கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…