தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் வடசென்னைக்கு உட்பட்ட பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சு பலமாக எழுந்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலம் எனப் பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில், தற்போது விஜய்யின் பார்வை சென்னை பக்கம் திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அவர் களம் காண்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் த.வெ.க நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிடாமல் தங்கள் கூட்டணியில் உள்ள பாமக-விற்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளன. விஜய் போன்ற ஒரு பலமான வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக கூட்டணியில் பாமக களம் காண்கிறது. பாமக மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், பெரம்பூர் தொகுதி அவர்களுக்கு முக்கிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களின் பலமான தொகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த இட ஒதுக்கீடு அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இக்கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாஜகவிற்கு மயிலாப்பூர், கோவை வடக்கு, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மன்னார்குடி உள்ளிட்ட 11 தொகுதிகளில் களம் காண்கிறது. விஜய்யின் வருகை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எனத் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…