“அம்மா எழுந்திருக்கவே இல்லை… கதறிய குழந்தைகள்”…. விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் திடீரென சரணடைந்த கணவன்….!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உடையராஜபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு என்பவருக்கும், ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு, அவரைத் திருமணமும் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனவேதனையடைந்த ஸ்ரீதேவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினார்.

சமீபத்தில் பாபுவின் வீட்டிற்கு வந்த ஸ்ரீதேவிக்கும் அவருக்கும் இடையே மீண்டும் பலத்த வாக்குவாதம் உருவாகியுள்ளது. அடுத்த நாள் காலையில் ஸ்ரீதேவி நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், பதற்றமடைந்த குழந்தைகள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்த அண்டை வீட்டார், ஸ்ரீதேவி அசைவற்றுப் கிடப்பதைக் கண்டு உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே தலைமையிலான படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனையிட்டு முக்கிய சான்றுகளைச் சேகரித்த பின், ஸ்ரீதேவியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பது உறுதியானதையடுத்து, ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா அல்லது தலையணையால் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தலைமறைவாகாமல் நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“காலால் எட்டி உதைத்து முகத்தில் கொடூரமாக தாக்கி…” அலறிய பெண்ணை விடாமல் அடித்த வாலிபர்…. உறைய வைக்கும் வீடியோ வைரல்…!!

இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…

5 minutes ago

திமுகவுக்கு ரூ.509 கோடி, பாஜகவுக்கு ரூ.6,986 கோடி…. லாட்டரி அதிபரின் சீக்ரெட் லிஸ்ட் அவுட்… எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி?… அதிர்ச்சி விவரம்… தமிழகமே அதிர்ச்சி…!

தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே…

20 minutes ago

“பல்லக்கில் கன்வாட் யாத்திரை…” 95 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற 35 பேரன்மார்கள்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து…

20 minutes ago

இப்படியா ஆகணும்…? பச்சை சிக்னல் விழுந்ததும் நகர்ந்த பேருந்து… சக்கரத்தில் சிக்கி பலியான பெண்… பதைப்பதைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை முலுண்ட் செக் நாகா சந்திப்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில், சாலையைக் கடக்க முயன்ற ஜெயஸ்ரீ பானஜி…

31 minutes ago

அடேய் என்னடா இது?…. “ஆம்புலன்ஸில் நோயாளி இல்லை… மூட்டை மூட்டையாக இதுதான் இருக்கா?… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள போரசா தானியச் சந்தைப் பகுதியில், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் வெங்காய மூட்டைகள்…

39 minutes ago