உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து கன்வாட் யாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஹரித்வார் சென்று கங்கையில் புனித நீராடி கன்வாட் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது. பாட்டியின் இந்த ஆசையை நிறைவேற்ற உறுதிபூண்ட அவரது பேரன்மார்கள், அவரைப் பல்லக்கில் அமர வைத்துத் தங்களது தோள்களில் சுமந்தபடி பயணத்தைத் தொடங்கினர்.
இந்த நெகிழ்ச்சியான யாத்திரையைக் கண்ட உத்தரப்பிரதேசக் காவல் துறையினர், மூதாட்டி மற்றும் அவரது பேரன்மார்களின் பாதுகாப்பான பயணத்திற்காகத் தேவையான பாதுகாப்பு உதவிகளையும் வழங்கியுள்ளனர். பேரன்களின் இந்த அளவற்ற அன்பும் அர்ப்பணிப்பும் இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…
தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…
மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ…
அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…
அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…