திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பெற்ற தாயை மகனே ஓடும் ரயில் முன்பு தள்ளி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்த தனது தாயை, ஈவு இரக்கமின்றி ரயில் தண்டவாளத்தில் தள்ளிய இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்தக் கொலையைச் செய்தவர் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதியின் மகனான பார்த்தசாரதி எனத் தெரியவந்துள்ளது. மூதாட்டி தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய்வாய்ப்பட்ட தனது தாயைத் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனதே பார்த்தசாரதியின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் உடனடியாகக் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், தாயின் மருத்துவச் செலவு மற்றும் பராமரிப்புச் சுமையைத் தாங்க முடியாமலேயே அவரை ஓடும் ரயிலில் தள்ளிக் கொன்றதாக பார்த்தசாரதி ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள்…
சென்னை கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த தாம்பரத்தைச் சேர்ந்த ஹயத்துன்நிஷா என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் தனு பரத்வாஜ் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ…
2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுகவைக் கட்டமைக்கும் நோக்கில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தோல்வியின் பின்னணியை ஆராய அமைக்கப்பட்ட…
சமூக வலைத்தளங்களின் மோகம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் சிறுவர்,…
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி விவகாரங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாவட்டச் செயலாளர்களில் ஒருவர்…